மூடு

நவகைலாயம்

நவகைலாயம் என்பது ஒன்பது திருத்தலங்களை குறிக்கும். ஒன்பது சிவன் கோயில்கள் பக்தர்களுக்கு உடல் நலம் மற்றும் செல்வத்தை அளிப்பவையாக உள்ளன. ஒன்பது கோவில்களில் நான்கு கோவில்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பாபநாசம்

திருநெல்வேலியிலிருந்து 45கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தெய்வம் பாபாவினாசர் மற்றும் கைலாசநாதர். இந்த கோயிலின் நதி காட்சியாக தாமிரபரணி நதி உள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும். இங்கிருந்து 2கி.மீ தொலைவில் மிக முக்கியமான அகஸ்தியர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

சேரன்மகாதேவி

திருநெல்வேலியிலிருந்து 22கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பேரூந்துகள் இயக்கப்படுகின்றன.

கோடகநல்லுர்

திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவிக்கு செல்லும் வழியில் 15கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள தெய்வழிபாடு கைலாசநாதர் மற்றும் சிவகாமியம்மை. இக்கோவிலுக்கு செல்ல திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பேரூந்துகள் இயக்கப்படுகின்றன.

குன்னத்தூர்

திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து 2கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவேங்கடநாதபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய குன்றில் அமைந்துள்ளது. தெய்வ வழிபாடு கோதை பரமேஸ்வரன், சிவகாமசுந்தரி.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவகைலாயங்கள்

முரப்பநாடு

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 17கி.மீ. தொலைவிலும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 40கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் – கைலாசநாதர் இறைவி – சிவகாமிஅம்மாள்

ஸ்ரீவைகுண்டம்

திருநெல்வேலியிலிருந்து 30கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 40கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. முதல் நவதிருப்பதி கோவில் இங்கே அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் – கைலாசநாதர் இறைவி – சிவகாமியம்மை

தென்திருப்பேரை

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அழகிய தேவதாசி கோயில் ஒன்று உள்ளது.
இங்கு வணங்கப்படும் இறைவர் – கைலாசநாதர்

இராஜபதி

இக்கோயில் தென்திருப்பேரை நவகைலாயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் – கைலாசநாதர் இறைவி – சிவகாமி அம்மாள், அழகிய பொன்னம்மாள்

சேந்தன்பூமங்கலம்

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 20கி.மீ தொலைவில் ஆத்தூர் மற்றும் புன்னகாயல் அருகில் அமைந்துள்ளது. இங்கு வணங்கப்படும் இறைவர் -கைலாசநாதர் இறைவி – சிவகாமி அம்மை